ஆப்நகரம்

அப்பப்போ இந்த மாதிரி அவதாரம் எடுக்கும் தனுஷ்!

பவர் பாண்டி படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது இயக்குனர் பணியை மீண்டும் கையிலெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 27 Jul 2019, 1:49 pm
தனுஷ் பரபரப்பாக 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பவர் பாண்டி படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் "அசுரன்". இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். அதன் பிறகு சத்யஜோதி பிலிம்ஸின் 2 படங்கள் என்று படு பிசியாக உள்ளார்.
Samayam Tamil dhanush

Adhyayam Ondru: விஜய்யை ஏமாற்றிய இயக்குனர்? வாய்ப்பை தட்டிப்பறித்த தயாரிப்பாளர்!
நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் 2017ல் வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டது. இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதியுடன் தனுஷூம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் சிறுவயது ராஜ்கிரனாக நடித்திருப்பார் தனுஷ். படத்தில் சில மணிநேரம் வந்திருந்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருப்பர். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
Janhvi Kapoor: விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் ஹீரோயின்!
Ajith: நேர்கொண்ட பார்வை படத்தில் பிளாஷ்பேக் காட்சியா? தாடியுடனும், தாடியில்லாமலும் தல!
இப்படத்தின் வெற்றியத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை தனுஷ் இயக்கப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப் படுகிறது. இந்த செய்தியை கேட்டதிலிருந்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்