ஆப்நகரம்

பேட்ட படத்தைத் தொடர்ந்து மீண்டும் கூட்டணி சேர்ந்த த்ரிஷா மற்றும் சிம்ரன்!

பேட்ட படத்தைத் தொடர்ந்து நடிகைகள் த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Samayam Tamil 8 Feb 2019, 4:31 pm
பேட்ட படத்தைத் தொடர்ந்து நடிகைகள் த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil tri


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பேட்ட. இந்தப் படத்தில் நடிகைகள் சிம்ரனும், த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தனித்தனி காட்சிகளாக நடித்திருந்தனர். இந்த குறையைப் போக்க முடிவு செய்துள்ளார் அறிமுக இயக்குனர் சனந்த்.

தற்போது இயக்குனர் சனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரையும் ஒன்றாக இணைத்து நடிக்கவைக்கவுள்ளார். அதுவும் ஆக்ஷன் படத்தில். இந்தப் படத்தில் இருவரும் ஆக்ஷனில் இறங்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பிய நடிகை சிம்ரன், அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் சமந்தாவிற்கு சித்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்