ஆப்நகரம்

ரஜினிக்கும், விஜய் சேதுபதிக்கும் நேரமே சரியில்லை

ட்விட்டரில் தேசிய அளவில் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் பெயர் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நல்ல விஷயத்திற்காக இல்லை.

Samayam Tamil 14 Oct 2020, 2:24 pm
இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பலருக்கும் பிடிக்கவில்லை. இலங்கையில் நடந்த போரின்போது ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்த, இருக்கும் முத்தையா முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதி வெட்கப்பட வேண்டும் என்று கூறி #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
Samayam Tamil rajinikanth


என்ன தைரியம், திமிர்: ட்விட்டரில் டிரெண்டாகும் #ShameonVijaySethupathi

இந்த ஹேஷ்டேக் காலையில் இருந்து டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் #Rajinikanth என்கிற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகத் துவங்கியுள்ளது. ரஜினியின் பெயர் டிரெண்டாக காரணம் அவர் சொத்து வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகியது தான்.

சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வரி விதித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ரஜினி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வரி விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காததால் வருமானம் இல்லை. அதனால் சொத்து வரி கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என்று ரஜினி கோரிக்கை விடுத்தார். கடந்த 23ம் தேதி இது தொடர்பாக மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியும் பதில் இல்லை என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா, மாநகராட்சிக்கு 23ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு, 29ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வீர்களா?. பதில் இல்லை என்றால் நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும். இதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பீர்களா என்று கேட்டு எச்சரித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெற ரஜினி முடிவு செய்தார்.

அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் #Rajinikanth என்கிற ஹேஷ்டேகுடன் ரஜினியை கிண்டல் செய்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வரி செலுத்த முடியாது போடா. இவர் தான் சிஸ்டத்தை சரி செய்யப் போகிறாரா?. வரி விஷயம் பற்றியே ரஜினிக்கு தெரியவில்லையே. இதில் இவர் எப்படி கட்சி துவங்கி, ஆட்சி செய்வார்?

நீதிமன்றம் வரை போய் அசிங்கப்படுவது தேவையா?. நீதிபதி அனிதா சுமந்த் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டாரே என்று தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

வரி தொடர்பான சட்டம் தெரியாமல் ரஜினியை பற்றி குறை சொல்ல வேண்டாம். அவர் எல்லாம் தெரிந்தவர். அவர் தனக்காக மட்டும் நீதிமன்றம் செல்லவில்லை. தன்னை போன்று திருமண மண்டபம் வைத்திருக்கும் அனைவருக்காகவும் தான் சென்றார்.

ரஜினி என்கிற பெயரை பார்த்ததும் சும்மா கிண்டல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்