ஆப்நகரம்

Arya: திருமணத்திற்கு பிறகு ஜோடி சேர்ந்த ஆர்யா – சாயிஷா: பூஜையுடன் தொடங்கிய டெடி படப்பிடிப்பு!

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 24 May 2019, 2:03 pm
ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகும் டெடி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
Samayam Tamil arya


கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, தேனிலவிற்கு சென்று வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த நிலையில், அண்மையில், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியானது. இதனைப் பார்த்த சாயிஷா கணவர் ஆர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில், கஜினிகாந்த் படத்தைத் தொடர்ந்து டெடி என்ற படத்தின் மூலம் இருவரும் சினிமாவில் ஜோடி சேர்ந்துள்ளனர். சக்தி சௌந்தர ராஜன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகியோருடன் இணைந்து சதீஷ், கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மகாமுனி மற்றும் காப்பான் ஆகிய படங்களின் வெளியீட்டிற்காக ஆர்யா காத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்