ஆப்நகரம்

மீண்டும் ஊர் பெயரில் படத்தை துவங்கும் பேரரசு!

எல்லா படங்களுக்கும் ஊர் பெயரை தலைப்பாக வைத்து இயக்கிய பேரரசு மீண்டும் ஒரு ஊர் பெயரில் தனது புதிய படத்தை தொடங்கவுள்ளார்.

TNN 17 Apr 2017, 4:36 pm
எல்லா படங்களுக்கும் ஊர் பெயரை தலைப்பாக வைத்து இயக்கிய பேரரசு மீண்டும் ஒரு ஊர் பெயரில் தனது புதிய படத்தை தொடங்கவுள்ளார்.
Samayam Tamil again director perarasu start a movie in title of city name
மீண்டும் ஊர் பெயரில் படத்தை துவங்கும் பேரரசு!


இயக்குனர் பேரரசு, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘தர்மபுரி’, ‘பழனி’, ‘திருவண்ணாமலை’, ‘திருத்தனி’, ‘திருப்பதி’ என ஊர்களின் பெயர்களை தனது படத்திற்கு தலைப்பாக வைத்து இயக்கினார். இவை எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. மேலும், ஆரம்பத்தில் வருடத்திற்கு இரண்டு படம் இயக்கிய பேரரசு, பின்னர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார். ஆனால் தற்போது அவர் எந்த படமும் இயக்கவில்லை.

இந்நிலையில், சிலகாலம் இடைவெளி கொடுத்த பேரரசு, மறுபடியும் ஒரு படத்தை இயக்கப்போகிறாராம். தனது வழக்கமான கிராமத்து பாணியில் அடுத்த மாதம் ஒரு படத்தை தொடங்கப்போவதாக சொல்லும் பேரரசு, எனது முந்தைய படங்களைப்போலவே இந்த படமும் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்கும் ஒரு ஊர் பெயரைத்தான் வைக்கப்போகிறேன். அதற்காக மீண்டும் எனது அருவாளை கையில் எடுக்கப்போகிறேன் என்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்