கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. வரும் 25 ஆம் தேதி விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில், நரேன், யோகி பாபு, ரமணா, பொன்வண்ணன், மகாநதி சங்கர், தீனா, தலைவாசல் விஜய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் எந்த ஹீரோயினும் நடிக்கவில்லை. ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் கார்த்தி கைதியாக நடித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி
லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில், பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சுபஸ்ரீ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார். அப்போது, வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். தற்போது, இதனை ரசிகர்கள் கடைபிடித்து வருகின்றனர். மாறாக போஸ்டர் அடித்து ஒவ்வொரு படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கார்த்தியின் கைதி படம் வெளியாகவுள்ள நிலையில், பேனர், போஸ்டர், கட் அவுட் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளை தவிர்த்து ஹில் சாரிட்டி (Hill Charity), ஆதரவற்ற குழந்தைகளுக்காக தூத்துக்குடி மாவட்ட கார்த்தி மக்கள் நலமன்றம் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்து வருகின்றனர். தர்பார் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு: 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி
லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பள்ளிக்கரணை பகுதியில், பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சுபஸ்ரீ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார். அப்போது, வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். தற்போது, இதனை ரசிகர்கள் கடைபிடித்து வருகின்றனர். மாறாக போஸ்டர் அடித்து ஒவ்வொரு படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கார்த்தியின் கைதி படம் வெளியாகவுள்ள நிலையில், பேனர், போஸ்டர், கட் அவுட் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகளை தவிர்த்து ஹில் சாரிட்டி (Hill Charity), ஆதரவற்ற குழந்தைகளுக்காக தூத்துக்குடி மாவட்ட கார்த்தி மக்கள் நலமன்றம் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்து வருகின்றனர். தர்பார் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.