ஆப்நகரம்

Maanaadu: மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு: புதிய திருப்பம்!

மாநாடு படத்தில் சிம்பு விலக்கப்பட்டதை தொடர்ந்து தானே எழுதி இயக்கும் மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Aug 2019, 1:49 pm
தமிழகத்தின் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் மனதில் தோன்றுவது சிம்புவின் பெயர்தான். முதலில் நயன்தராவுடன்காதல், அனிருத்துடன் பீப் சாங், நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் இருப்பது, இயக்குனரிடம் மோதல், பின்பு ஹன்ஷிகாவுடன் காதல், பல படங்களில் ஒப்பந்தமாகி பின்பு தயாரிப்பாளர்களுக்கு கல்தா கொடுப்பது என்று தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கிவருபவர் சிம்பு.
Samayam Tamil Maanaadu Simbu


சமீபத்தில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்த மாநாடு படத்திலிருந்து விலக்கப்பட்டார். இந்த விசயம் மீண்டும் சர்ச்சைகளை தோற்றுவித்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பிரச்சனைகள் இருந்து வந்தது. வெங்கட் பிரபு திரைக்கதை முடித்து எல்லா ஏற்பாடுகளுடன் காத்திருக்க, சிம்பு ஞானவேல் ராஜா தயாரிக்கும் “மஃப்டி ரிமேக் படத்திற்கு ஷூட்டிங் போய்விட்டார். மேலும் மாநாடு படத்தில் நடிக்க அவர் பல கட்டளைகள் போட, வெறுப்பில் வெங்கட் பிரபு வெப் சீரீஸ் இயக்க கிளம்பி விட்டார்.

Also Read: Indian 2: இந்தியன் 2 படத்தில் புதிதாய் இணைந்த ஹீரோயின்!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேரமும் பணமும் வீணாகிவிட்டதாக கூறி சிம்பு படத்திலிருந்து விலக்கியதாக அறிவித்தார். மேலும் வேறு ஹீரோவை வைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் துவங்கும் என்றும் கூறினார். சிம்பு படங்கள் தொடர்ந்து ஷூட்டிங் பிரச்சனைகளில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் செய்வதற்கு தயங்கி வருகிறார்கள் இந்த நிலையில் ஷூட்டிங் தொடங்கப்படாமலே மாநாடு படம் நிறுத்தப்பட்டது. சிம்புவுக்கு கெட்ட பெயர் பெற்றுத் தந்தது.

Also Read: பாலிவுட்டை கலக்கும் தமிழர்கள்: மூன்று நாட்களில் ரூ.70 கோடி வசூல் கொடுத்த மிஷன் மங்கள்!

இந்த நிலையில் “மாநாடு” படத்திற்கு போட்டியாகடி.ராஜேந்தர் அவர்களின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு இயக்கி நடிக்க உள்ள படத்திற்கு “மகா மாநாடு எனப் பெயர் வைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சிம்புவே மீண்டும் மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சியின் பிறந்த நாள். அவர் பிறந்த நாளுக்கு எதிர்பாராதவிதமாக சிம்புவிடம் இருந்து போன் வந்துள்ளது. போனில் வந்து வாழ்த்து கூறிய சிம்பு, தனனால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Also Read: டூயட் ஆடவும், படத்தை அலங்கரிக்கும் பொம்மையாகவும் நடிக்க விருப்பமில்லை: ஸ்ரத்தா கபூர்!

அது மட்டுமல்லாமல் மீண்டும் “மாநாடு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் சுரேஷ் கமாட்சி ஆச்சர்யப்பட்டு போனாராம். மிக விரைவில் மீண்டும் சிம்பு நடிக்க “மாநாடு படம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த தகவல் பரவியதால் சினிமா உலகம் பரபரப்பாகியுள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அறிவித்தால் மட்டுமே தெரியும். எனினும் சிம்பு ரசிகர்கள் இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பரப்பி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்