ஆப்நகரம்

Airaa: ஐராவும், நயன்தாராவும் எப்படி? புட்டு புட்டு வச்ச இயக்குனர் சர்ஜூன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் நாளை (28ம் தேதி) முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 27 Mar 2019, 7:08 pm
லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் நாளை (28ம் தேதி) முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Samayam Tamil ton


மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். முதல் முதலாக யமுனா மற்றும் பவானி என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இப்படம் மற்றும் நயன்தாராவுடன் பணியாற்றியது குறித்து சர்ஜூன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐரா தலைப்பு தேர்வுக்கான காரணம்?

ஐராவதம் என்ற வார்த்தையின் சுருக்கம் தான் ஐரா. புராணத்தில் இந்திரனை சுமந்து செல்லும் யானையின் பெயர் தான் ஐராவதம். அறிவியலின் கருத்துப்படி பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்குமாம். இரு வேடங்களில் நடிக்கும் நயன்தாராவுக்கு ஒரு கதாபாத்திரத்திற்கு அதிக ஞாபகசக்தி இருக்குமாம். ஆகையால், தான் எழுத்தாளர் ப்ரியங்கா ரவிந்திரன் தான் இப்படத்திற்கு ஐரா தான் சரியான டைட்டில் என்று தேர்வு செய்தார்.

நயன்தாராவின் சம்மதம் எப்படி?

ஏற்கனவே நயன்தாராவின் அறம் படத்தை தயாரித்த காட்பாடி ராஜேஷ் தான் ஐரா படத்தையும் தயாரித்துள்ளார். நயன்தாராவிற்காக பெண்களை சார்ந்த கதைகள் வேண்டும் என்று என்னை அணுகினார். அப்போது தான் எனக்கு ப்ரியங்கா ரவீந்திரன் எழுதிய கதை ஞாபகத்திற்கு வந்தது. அவர் என்னுடைய மா குறும் படத்திற்கு கதை எழுதியிருந்தார். இதையடுத்து, ஒரேயொரு வரியை மட்டும் கேட்ட நயன்தாரா உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ப்ரியங்கா கதை எழுத நான், டயலாக் எழுதினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாயா, டோரா வரிசையில் இப்போ ஐரா எப்படி?

ஹாரர் படங்களை விட ஐரா அதிக பவர் கொண்ட த்ரில்லர் படம். மேலும், படம் பார்த்த பிறகு தியேட்டரில் இருந்து வெளியேறும் போது ஒரு வித உணர்ச்சிப்பூர்மான உணர்வு உங்களுக்கு ஏற்படும். அதோடு, பிளாஷ்பேக் காட்சிகளும் மற்ற ஹாரர் படங்களை விட இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஐராவில் நயன்தாராவின் கதாபாத்திரம் எப்படி?

முதலில் ஒரேயொரு கதாபாத்திரத்தில் மட்டும் நயன்தாராவை நடிக்க வைக்கல்லாம் என்று தான் நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி, யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். யமுனா, சிட்டியை சேர்ந்த ஒரு மாடனான பெண். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பேய் எப்படி ஏமாற்றுகிறது என்பதை ஷூட் செய்கிறார்.

இதே போன்று மற்றொரு கதாபாத்திரம் பவானி. சிறிய நகரத்தில் வசித்து வருகிறார். இதற்கு வேறொரு பெண்ணை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், படத்தின் இறுதி கதை படி இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை நடிக்க வைத்தோம். இதற்காக மேக்கப் டெஸ்ட் நடத்தினோம். அதுவும் வெற்றியாக முடிந்தது.

பொதுவாக, ஒரு படத்தில் இரட்டை வேடம் என்றால், ஒன்று மற்றொன்றை பிரதிபலிப்பது போன்று இருக்கும். ஆனால், எங்களுக்கு அப்படி இருக்க கூடாது. அதனால், ஒரு கதையை மற்றொரு கதாபாத்திரத்திற்குள் வரவிடாதபடி காட்சி அமைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தான் பவானி மற்றும் யமுனா என்ற வெவ்வேறு கதாபாத்திரம் வந்தது.

எப்படி யமுனா, பவானி ரெண்டிலும் நயன் நடித்தார்?

தனது கச்சிதமான நடிப்பை நயன்தாரா இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கான முழு முயற்சியும் செய்துள்ளார். மேக்கப் மற்றும் அவரது நடிப்பு ரெண்டுமே இப்படத்தில் புதுசு. அவரது உடல்மொழி பார்வையாளர்களை தூண்டும் வகையில் இப்படத்தில் அமைந்துள்ளது.

நயன்தாராவுக்கு டப்பிங் யார்?

இப்படத்தில் யமுனா என்ற கதாபாத்திரத்திற்கு தீபா வெங்கட் டப்பிங் பேசியுள்ளார். இதே போன்று, பவானி என்ற கதாபாத்திரத்திற்கு கிருத்திகா நெல்சன் டப்பிங் பேசியுள்ளார்.

இப்படம் வெற்றிப்படமாகுமா?

கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் வகையில் இருக்கும். திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை கவரும் வகையில் இப்படம் இருக்கும். அதற்கேற்ப நயன்தாரா நடித்துள்ளார். முதல் பகுதியில், யோகி பாபுவின் காமெடி கலக்கும் வகையில் இருக்கும். 2ம் பாதி, சென்டிமெண்ட் நிறைந்ததாக இருக்கும். பொதுவாக ஹாரர் படத்திற்கு ஊதா மற்றும் பச்சை நிறம் பயன்படுத்தப்படும். ஆனால், இப்படத்தில் ஆரஞ்சு மற்றும் சிகப்பு கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஷ்பேக்கில் வரும் பவனி கதாபாத்திரம் பிளாக் அண்ட் ஒயிட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்