தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தன் கணவரை வைத்து 3 படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார்.
ஐஸ்வர்யா தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அவர் படங்களை இயக்க அவசரம் காட்டவில்லை. இந்நிலையில் சென்னையில் யோகா ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
தன் தந்தை ரஜினிகாந்த் யோகா செய்வதை பார்த்து வளர்ந்த தனக்கும் அதன் மீது ஈடுபாடு அதிகம் என்கிறார் ஐஸ்வர்யா. அவர் தன் யோகா ஸ்டுடியோவில் யோகாசனங்கள் செய்யும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா தனது உடம்பை வில்லாய் வளைத்து யோகாசனங்கள் செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
வாவ், உங்களின் புகைப்படங்களை பார்க்கும் போது எங்களுக்கும் யோகா செய்ய வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது. எப்படிக்கா இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள்?. உங்களை பார்த்தால் டீனேஜ் பையனின் அம்மா என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இளமையாக இருக்கிறீர்கள்.
தனுஷ் அண்ணாவின் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டால் சந்தோஷப்படுவோம். அடுத்த படத்தை எப்பொழுது இயக்கப் போகிறீர்கள்?. தனுஷ் அண்ணவை வைத்து மீண்டும் ஒரு படம் பண்ணுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா படம் இயக்குவதில் மட்டும் அல்ல பரதநாட்டியம் ஆடுவதிலும் வல்லவர். அவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் பரதநாட்டியம் ஆடினார். அதை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ஆடியது பரதமே இல்லை என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்ததுடன், மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். முறையாக பரதம் கற்றவர்கள் கூட ஐஸ்வர்யாவை விமர்சித்தார்கள். அதன் பிறகு ஐஸ்வர்யா சிறிது காலம் சமூக வலைதளங்கள் பக்கமே வராமல் இருந்தார்.
ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை போன்ற பன்முகத் திறமை கொண்டவர். விசில் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் பாட்டு பாடியுள்ளார் ஐஸ்வர்யா. தன் வாழ்க்கை பற்றி புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அவர் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது.
கெரியரை பொறுத்த வரை தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடித்து வந்தார் தனுஷ். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் மதுரையில் அத்ரங்கி ரே படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் பாலிவுட் பட ஷூட்டிங் மதுரையில் துவங்குகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அத்ரங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கானும் இருக்கிறார்கள். சாரா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுனுக்கு முன்பு அத்ரங்கி ரே படப்பிடிப்பு வாரணாசியில் நடந்தது. வாரணாசியில் படப்பிடிப்பு நடந்தபோது சாரா அலி கான் கோவில்களுக்கு சென்று வழிபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்தவர்கள் ஒரு முஸ்லீம் பெண் இப்படி கோவிலுக்கு போகலாமா என்று கேட்டார்கள்.
ஐஸ்வர்யா தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அவர் படங்களை இயக்க அவசரம் காட்டவில்லை. இந்நிலையில் சென்னையில் யோகா ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா.
தன் தந்தை ரஜினிகாந்த் யோகா செய்வதை பார்த்து வளர்ந்த தனக்கும் அதன் மீது ஈடுபாடு அதிகம் என்கிறார் ஐஸ்வர்யா. அவர் தன் யோகா ஸ்டுடியோவில் யோகாசனங்கள் செய்யும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா தனது உடம்பை வில்லாய் வளைத்து யோகாசனங்கள் செய்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
தனுஷ் அண்ணாவின் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டால் சந்தோஷப்படுவோம். அடுத்த படத்தை எப்பொழுது இயக்கப் போகிறீர்கள்?. தனுஷ் அண்ணவை வைத்து மீண்டும் ஒரு படம் பண்ணுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா படம் இயக்குவதில் மட்டும் அல்ல பரதநாட்டியம் ஆடுவதிலும் வல்லவர். அவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் பரதநாட்டியம் ஆடினார். அதை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ஆடியது பரதமே இல்லை என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்ததுடன், மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். முறையாக பரதம் கற்றவர்கள் கூட ஐஸ்வர்யாவை விமர்சித்தார்கள். அதன் பிறகு ஐஸ்வர்யா சிறிது காலம் சமூக வலைதளங்கள் பக்கமே வராமல் இருந்தார்.
ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை போன்ற பன்முகத் திறமை கொண்டவர். விசில் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் பாட்டு பாடியுள்ளார் ஐஸ்வர்யா. தன் வாழ்க்கை பற்றி புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அவர் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது.
கெரியரை பொறுத்த வரை தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்தி படத்தில் நடித்து வந்தார் தனுஷ். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் மதுரையில் அத்ரங்கி ரே படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் பாலிவுட் பட ஷூட்டிங் மதுரையில் துவங்குகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அத்ரங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கானும் இருக்கிறார்கள். சாரா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுனுக்கு முன்பு அத்ரங்கி ரே படப்பிடிப்பு வாரணாசியில் நடந்தது. வாரணாசியில் படப்பிடிப்பு நடந்தபோது சாரா அலி கான் கோவில்களுக்கு சென்று வழிபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்தவர்கள் ஒரு முஸ்லீம் பெண் இப்படி கோவிலுக்கு போகலாமா என்று கேட்டார்கள்.