ஆப்நகரம்

யாஷிகாவுடன் சேர்ந்து படம் பண்ண மாட்டேன் - ஐஸ்வர்யா தத்தா அதிரடி!

யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அவருடைய தோழி ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2019, 8:25 am
Samayam Tamil yashika and aiswarya
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா.

அந்த நிகழ்ச்சியில் எப்போதும் இருவரும் ஒன்றாகச் சுற்றி திரிந்தார்கள். அவர்களது நட்பு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் இல்லாமல் வெளியே வந்தும் தொடர்கின்றன. அதுவும் இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.

அடிக்கடி இருவரும் வெளியே சென்று சந்தித்து வருகின்றனர். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்து வருகின்றனர்.

சதீஷை ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளுத்து வாங்கிய சாக்ஷி அகர்வால்

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தாவிடம், நீங்களும், யாஷிகாவும் இணைந்து நடிப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது, 'யாஷிகா நிறைய நல்ல படங்கள்'ல நடிச்சிருக்காங்க. யாஷிகா நடிச்ச ஜாம்பி பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா. நல்ல கதைகள் வந்தா நாங்க சேர்ந்து நடிக்கலாம்'னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு நினைக்கிறேன்.

100 கோடி வசூல் சாதனை செய்த அசுரன்! குவியும் வாழ்த்துக்கள்

அதுக்கு காரணம் என்னவென்றால், நாங்க இருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பர்கள். ஒரே படத்துல நடிக்கும் போது, போட்டி போட்டு நடிக்க வேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. அதனால நாங்க இரண்டு பேரும் இப்போ இருக்கிற மாதிரி எப்போவும் நல்ல தோழிகளா இருக்க விரும்புறோம்.

ஆகையால் தான் நாங்க சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை என்று கூறினேன்' என்று பேசியுள்ளார். ஐஸ்வர்யா தத்தாவின் இந்த முடிவு இருவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்