ஆப்நகரம்

மீண்டும் தமிழில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 27 May 2017, 12:39 am
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil aishwarya rai is to return kollywood again
மீண்டும் தமிழில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!


உலக அழகி பட்டம் பெற்றவரான ஐஸ்வர்யா ராய், ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ,‘எந்திரன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ராவணன்’. இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

‘குரு’, ‘இருவர்’, ‘ராவணன்’ படங்களைத் தொடர்ந்து, மறுபடியும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது. தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி யார் என்பது பற்றி விரைவில் தெரியவரும்.

Kollywood: Aishwarya Rai to return Kollywood again.

அடுத்த செய்தி

டிரெண்டிங்