ஆப்நகரம்

மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்'; விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மணிரத்னம் படத்தில் இருந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் விடைபெற்றுக் கொண்டார்.

Samayam Tamil 12 May 2018, 6:38 pm
சென்னை: மணிரத்னம் படத்தில் இருந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் விடைபெற்றுக் கொண்டார்.
Samayam Tamil Aishwarya Rajesh
ஐஸ்வர்யா ராஜேஷ்


மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அர்விந்த்சாமி, அருண் பிரபு, விஜய் சேதுபதி, சிலம்பரசன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முதல் முறையாக வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

இதையடுத்து துபாயில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன.

இதையடுத்து தனது டுவிட்டரில், ’என்னுடைய காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டன. மணிரத்னம் சாருடன் வேலைபார்த்தது அற்புதமான அனுபவம். இது என் வாழ்நாள் கனவு.

மிக்க நன்றி சார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மணிரத்னத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் ‘லைகா புரொடக்‌ஷன்’ இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Aishwarya Rajesh wraps shooting for Chekka Chivantha Vaanam.

அடுத்த செய்தி

டிரெண்டிங்