இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
தனுஷ் உடனான பிரிவை அறிவித்த பின், நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்ஷனில் இறங்கினார் ஐஸ்வர்யா. பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
தனது கேரியர் சம்பந்தமான விஷயங்களில் படு பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா நேற்றைய தினம் தந்தையர் தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்னுடைய இதயத்துடிப்பு’ என கேப்ஷன் கொடுத்து தந்தையர் தின வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த க்யூட்டான புகைப்படத்திற்கு இணையத்தில் லைக்குகளை குவிந்து வருகின்றனர்.
மத வன்முறை தவறு.. யாருக்கும் உரிமை இல்லை: சர்ச்சைகளுக்கு சாய் பல்லவியின் பதிலடி.!
அவரின் இந்த புகைப்படத்திற்கு கீழ் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை குவித்து வருகின்றனர். எங்கள் தலைவர், உங்களுடைய இதயத்துடிப்பை எப்பவும் சந்தோஷமா பார்த்துக்கோங்க. அவரை கஷ்டப்படுத்தாதீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் பலர் ஐஸ்வர்யாவிற்கு தந்தையர் தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.