ஆப்நகரம்

ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்: ரஜினி பிறந்தநாளில் வெளியிட திட்டம்

ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்: ரஜினி பிறந்தநாளில் வெளியிட திட்டம்

TNN 23 Mar 2016, 4:11 pm
புதுதில்லி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்கள் முதன் முதலாக எழுதியிருக்கும் ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு, என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் கைப்பற்றியிருக்கிறது.
Samayam Tamil aishwaryaa rajinikanth dhanush standing on an apple box
ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்: ரஜினி பிறந்தநாளில் வெளியிட திட்டம்


இந்த புத்தகத்தில் தன்னுடைய நினைவுகளையும் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவங்களின் துளிகளையும் பதிவு செய்திருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தும்,பெண்ணானவள் வீட்டிலும், வெளியிலும் எம்மாதிரியான விஷயங்களுக்கு எப்படி முகங் கொடுக்கிறாள் என்பதை நெஞ்சை நெகிழச் செய்யும் வகையிலும், நேர்மையான முறையிலும் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அத்துடன் வெளியுலகத்தில் எங்கு சென்றாலும் தன்னைத் பின்தொடரும் கேமராக்களும், தன்னையே கண்காணிக்கும் ஏனையவர்களின் மத்தியிலும் தனக்கான சுய அடையாளத்தை எப்படி மீட்டு எடுத்தார் என்பதையும் இதல் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ஆர் தனுஷ் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் தொடக்கத்தில் இவர் ஒரு தொழிலதிபர். அத்துடன் இவர் நன்கு தேர்ச்சியடைந்த பரதநாட்டிய கலைஞர் மற்றும் சிறந்த வாசிப்புகளை வாசிக்கும் பழக்கமுடையவரும் கூட.

2015 ஆம் ஆண்டில் இவர் டென் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, குறும்படங்களையும், அதற்கான கதைக்கரு மற்றும் உள்ளடக்கங்களையும் டிஜிட்டல் மீடியத்தில் பிரபலமடையச் செய்யும் முயற்சியில் இறங்கினார். அத்துடன் கூடுதல் பொறுப்பாக தன்னுடைய கணவரும் நடிகருமான தனுஷ் அவர்களின் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த புத்தகம் சூப்பர் ஸ்டாரும், ஐஸ்வர்யாப்வின் தந்தையுமான ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்