சிதம்பரத்தைச் சேர்ந்த அஜித், விஜய் ரசிகர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போரட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த அஜித், விஜய் ரசிகர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடிய சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்பொழுதும் எலியும், பூனையுமாக இருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் காவிரிக்காக இணைந்து, ஒற்றுமையாக போராடியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தனுஷ், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதியின் ரசிகர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டாலும், தமிழகத்தின் பிரச்சனைக்காக கைகோர்த்து போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
காவிரி மேலாண்மை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போரட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சிதம்பரத்தைச் சேர்ந்த அஜித், விஜய் ரசிகர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராடிய சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்பொழுதும் எலியும், பூனையுமாக இருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் காவிரிக்காக இணைந்து, ஒற்றுமையாக போராடியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தனுஷ், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதியின் ரசிகர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டாலும், தமிழகத்தின் பிரச்சனைக்காக கைகோர்த்து போராடியது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.