ஆப்நகரம்

300 கோடி வசூலைத் தொட்ட அஜித்!!

2019ல் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்து அப்படங்க்களின் மூலம் 300 கோடி வசூலைக் குவித்துள்ளார் நடிகர் அஜித். இது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 18 Aug 2019, 2:34 pm
இந்த வருடத்திலேயே இரண்டாம் முறையாக ஒரு பெரிய ஹிட் படம் தந்திருக்கிறார் அஜித். விஸ்வாசத்திற்கு பிறகு "நேர்கொண்ட பார்வை" படமும் மிகப்பெரும் வசூலை குவித்திருக்கிறது. பெரும் பராட்டையும் பெற்றிருக்கிறது.
Samayam Tamil 1561604981_ajith-nerkonda-paarvai


தல அஜித் குமாரின் "நேர் கொண்ட பார்வை" திரைப்படம் ஆகஸ்ட் 8 அன்று வெளியாகி ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. தல அஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவான படம் "நேர் கொண்ட பார்வை'. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் "பிங்க்". அந்தப்படத்தின் தமிழ் ரிமேக்காக உருவான படம் தான் "நேர் கொண்ட பார்வை".

அஜித் வித்யாபாலன்

Also Read : ஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி?

முழுக்க பெண்ணியப் படமாக, பெண்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண்கள் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும், அடிமைத்தனத்தையும் அழுத்தமாக பேசிய படம் தான் "பிங்க்". முழுக்க பெண்கள் பார்வையில், பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த இந்தப்படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய வக்கீல் பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடிக்கிறார் எனும் செய்தியே முதலில் ஆச்சர்யம் தந்தது. மொத்த சினிமா உலகமும், 'இது ஒத்துவராது இந்தப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்றனர்.

நேர் கொண்ட பார்வை

Also Read : மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கப் போகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் விநோத் உட்பட படக்குழு அஜித்தை கொண்டு "பிங்க்" படத்தை ரீமேக் செய்யத் தயங்கியது. ஏனென்றால் தமிழகத்தில் அஜித்தின் தற்போதைய பிம்பம் அத்தகைய சக்தி வாய்ந்தது. அவரின் முகம் பார்க்க லட்சக்கணக்கில் கூட்டம் காத்துக்கிடக்கிறது. அஜித்தின் பெயர் எந்த மேடையில் ஒலித்தாலும், ஓங்கி எழும் கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆகும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு கண்மூடித்தனமான அன்பு அஜித்துக்கு மக்களிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆனால் அஜித் இப்படத்தை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து பெண்கள் ஆதரவு கருத்துக்களை தன் கமர்ஷியல் படங்களிலும் சொல்லிவருகிறார் அஜித். நேர் கொண்ட பார்வை கண்டிப்பாக தேவையான படம் என்று படக்குழுவிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் பொங்கலுக்கு வெளியானா விஸ்வாசம் படம் வெளிநாடு மற்றும் இந்தியா முழுதும் மொத்தமாக 200 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது நேர்கொண்ட பார்வை படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. சமீப காலங்களில் மொத்த தமிழ் சினிமாவும் வெற்றிக்கு தடுமாறிக்கொண்டிருக்க, ஒரே வருடத்தில் இரண்டாம் முறையாக வெற்றியை தொட்டு 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறார் அஜித். ரசிகர்கள் அனைவரும் இதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்