ஆப்நகரம்

அஜீத் ஆசைப்பட்டது விஜய் கைக்கு மாறியது!

தெலுங்கு படம் ஒன்றை அஜீத் ஆசைப்பட்டு தமிழில் எடுக்க நினைத்தபோது அது விஜய் கைக்கு மாறிவிட்டது.

TNN 9 Apr 2017, 9:58 am
தெலுங்கு படம் ஒன்றை அஜீத் ஆசைப்பட்டு தமிழில் எடுக்க நினைத்தபோது அது விஜய் கைக்கு மாறிவிட்டது.
Samayam Tamil ajith dream turned to the hand of vijay
அஜீத் ஆசைப்பட்டது விஜய் கைக்கு மாறியது!


தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என்றால் அது அஜீத், விஜய்தான். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி மாறி உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜீத் சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் மெகா ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் ரீமேக் பண்ணலாம் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், அதற்குள் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றுள்ளார். மேலும் அந்த படத்தில் விஜய் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாராம்.

பிறகு தரணி விஜய்யிடம் இந்த கதையை சொல்ல, விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அந்த படம்தான் தமிழில் ‘கில்லி’யாக வந்தது. மேலும், முதலில் இப்படத்தில் ஜோதிகா அல்லது சிம்ரன்தான் நடிப்பதாக இருந்தது. இவருவரின் கால்ஷீட் பிரச்னையால் அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனது. மேலும் அஜீத் ஆசைப்பட்ட படமும் கைநழுவி விஜய் பக்கம் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்