ஆப்நகரம்

கேரள மக்களுக்கு உதவ முன் வந்த அஜித் ரசிகர்கள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, உதவ நிவாரண பொருட்களை அஜித் ரசிகர்கள் வழங்க முன்வந்துள்ளனர்.

Samayam Tamil 17 Aug 2018, 11:38 am
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, உதவ நிவாரண பொருட்களை அஜித் ரசிகர்கள் வழங்க முன்வந்துள்ளனர்.
Samayam Tamil 4


கேரளாவில் வரலாறு காணாத பெய்துவரும் கனமழையால், பொதுமக்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக, கேரள மக்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இடுக்கி மக்களுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக, லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, சினிமா துறையினரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் நிவாரண பொருட்களை சேகரித்து வருகின்றனர். இப்பொருட்களை வரும் திங்கள் அன்று கேரளா கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதுவரை நிவாரண பொருட்களை கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள சமூக வலைதளத்தில் தொடர்பு எண்களையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்