ஆப்நகரம்

அஜீத் ரசிகர்கள் நடத்திய நல்லெண்ண புட்சால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆர்.கே.சுரேஷ்!

மலேசியாவில் அஜீத் ரசிகர்கள் நடத்திய நல்லெண்ண புட்சால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஆர்.கே. சுரேஷ் பரிசுகளை வழங்கினார்.

Samayam Tamil 27 Mar 2018, 5:14 pm
மலேசியாவில் அஜீத் ரசிகர்கள் நடத்திய நல்லெண்ண புட்சால் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஆர்.கே. சுரேஷ் பரிசுகளை வழங்கினார்.
Samayam Tamil rk-suresh-ajith


அஜீத்துக்கு வெற்றியோ தோல்வியோ அவருக்கு தைரியத்தை கொடுப்பதும் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் அவருடைய ரசிகர்கள்தான். அவர் எப்போதும் தன் ரசிகர்களின் நலன் மீது அக்கறை காட்டுபவர். ரசிகர்களுக்கு அவரவர்களின் குடும்பம்தான் தான் முக்கியம் என அறிவுரை வழங்குவார். ஆனாலும் தியேட்டரின் படங்களை மட்டும் கொண்டாடாமல் பல இடங்களில் அஜீத் பெயரால் சில ரசிகர்கள் அமைப்பை நடத்தி சமூக நலம் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறார்கள்.

மலேசியாவில் அஜீத் ரசிகர் மன்ற நல்லெண்ண புட்சால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 700 ரிங்கட், 2 வது பரிசாக 500 நிங்கட், 3 வது பரிசாக 250 ரிங்கட் பணத்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடுவராக ஆர்.கே.சுரேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை வழங்கினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்