ஆப்நகரம்

அஜீத் எப்போதும் என் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிப்பார்: நடிகர் கார்த்தி!

நடிகர் அஜீத்தைப் எப்போது பார்த்தாலும் என் குடும்பத்தைப் பற்றியே நலம் விசாரிப்பார் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 6:38 pm
நடிகர் அஜீத்தைப் எப்போது பார்த்தாலும் என் குடும்பத்தைப் பற்றியே நலம் விசாரிப்பார் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
Samayam Tamil ajith-karthi


நடிகர் அஜீத் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவர் செய்யும் வேலையில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர் கொஞ்சம் ரசிகர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார். தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் ரசிகர்களுக்குப் பிடித்த அசத்தலான நடிப்பை வழங்கி வருகிறார். அதாவது படப்பிடிப்பில் ஏகப்பட்ட ரசிகர்களுடன் அஜீத் புகைப்படம் எடுத்து வருகிறார், ரசிகர்களும் போட்டிபோட்டு போட்டோ எடுத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி அஜீத் பற்றி பேசுகையில், ‘‘எனக்கும் அஜீத் அவர்களுக்கும் நல்ல பழக்கம் உள்ளது. மிகவும் அன்பானவர், என்னிடம் எப்போது பேசினாலும் என் குடும்பத்தினரைப் பற்றி நலம் விசாரிப்பார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்