ஆப்நகரம்

அஜீத் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசக்கூடியவர்: நடிகை மீனா குமாரி!

நடிகர் அஜீத், இடைவேளையின் போது எல்லோரிடமும் கலகலப்பாக பேசக்கூடியவர் என்று நடிகை மீனா குமாரி கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 5:46 pm
நடிகர் அஜீத், இடைவேளையின் போது எல்லோரிடமும் கலகலப்பாக பேசக்கூடியவர் என்று நடிகை மீனா குமாரி கூறியுள்ளார்.
Samayam Tamil ajith-meena


நடிகர் அஜீத் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதையே நடைமுறையாக கடைபிடித்து வருகிறார். உடன் இருப்பவர்களின் கஷ்டத்தை அவர்களுக்கே தெரியாமல் நிறைவேற்றி வைப்பவர். இந்நிலையில் அவருடன் நிறைய பேர் நடித்துள்ளனர். இருந்தாலும் அவர்கள் அஜீத்துடன் நடித்த போது அஜீத்திடம் அவருக்கு பிடித்த நல்ல குணங்களை பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் அஜீத்துடன் ‘கிரீடம்’ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தவர் நடிகை மீனா குமாரி. அந்தப் படத்தில் விவேக்கிற்கு மனைவியாக நடித்திருப்பார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் நடிகர் அஜீத் பற்றி கூறியுள்ளார். அதில் ‘‘அஜீத் எல்லோரிடமும் கலகலப்பாக பேசக்கூடியவர். ‘கீரிடம்’ படத்தில் நிறைய காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையின் போது அஜீத் எல்லோருடன் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் நினைக்கும் போது இப்போதும் இனிமையாக இருக்கிறது’’ என்றார் நடிகை மீனா குமாரி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்