ஆப்நகரம்

Nerkonda Paarvai :மீண்டும் சண்டைக் காட்சியில் ரிஸ்க் எடுக்கும் அஜித்!?

நடிகர் அஜித், தற்போது நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் மீண்டும் ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 19 Mar 2019, 5:20 pm
நடிகர் அஜித், ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil nerkonda-parvai


இந்தப் படத்தில் அஜித்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் நடிகர் அஜித் வக்கிலாக நடிக்கிறார். இந்த படத்திலும் ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் உள்ளன.

அஜித் வில்லனுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சியொன்று, தற்போது படமாகி வருகிறது. மழையில் நனைந்தபடி நடித்து வருகிறார் அஜித்.ஏற்கனவே பலமுறை உடம்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதும், டூப் பயன்படுத்தாமல் இந்த சண்டை காட்சியில் அஜித்தே நடித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்