அஜித் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பிய படம் தான் ’பிங்க்’.
அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி, ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து தயாரித்துள்ள படம் தான் இது. நம் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை பார்வையை மாற்றும் வகையில் இப்படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஶ்ரீதேவி தான் இந்தப்படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஶ்ரீதேவியின் இறுதி ஆசைகளில் ஒன்றாக இப்படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் கூறியுள்ளார்.
’நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் பட வேலைகள் முன்னரே முடிந்த காராணத்தால், முன்கூட்டியே வெளியிட தற்போது திட்டமிட்டு வருகிறது. வரும் ஜுலை 26 அல்லது ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள்.
அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி, ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து தயாரித்துள்ள படம் தான் இது. நம் நாட்டில் பெண்கள் மீதான அடக்குமுறை பார்வையை மாற்றும் வகையில் இப்படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஶ்ரீதேவி தான் இந்தப்படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஶ்ரீதேவியின் இறுதி ஆசைகளில் ஒன்றாக இப்படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் கூறியுள்ளார்.
’நேர்கொண்ட பார்வை’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் பட வேலைகள் முன்னரே முடிந்த காராணத்தால், முன்கூட்டியே வெளியிட தற்போது திட்டமிட்டு வருகிறது. வரும் ஜுலை 26 அல்லது ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள்.