ஆப்நகரம்

"மிஸ் சூப்பர் குளோப் 2019" இந்திய அழகியாக தேர்வான சென்னை பொண்ணு!

மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த அக்ஷரா ரெட்டி, இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Samayam Tamil 6 May 2019, 4:22 pm
கேரளாவில் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு 22 மாநிலங்களில் இருந்து வந்து பல்வேறு அழகிகள் கலந்து கொண்டனர். அப்படி வந்தவர்களில் சிறந்த அழகியாக தேர்வானார் சென்னையை சார்ந்த பெண் அக்சரா ரெட்டி.
Samayam Tamil akshara-reddy


சென்னை திரும்பிய அழகி அக்ஷரா ரெட்டி அளித்த பேட்டியில், ‘‘பெண்களின் கனவுகளை இதுபோன்ற போட்டிகள் நிறைவேற்றுகிறது. இதுபோன்ற அழகிப் போட்டிகள் பெண்களுக்கு மிகவும் அவசியம். மீ டூ வந்ததற்கு பிறகே பெண்கள் பாலியல் தொந்தரவுகளை குறித்து தைரியமாக புகார் கூறி வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019 அழகி போட்டியில் நான் பங்கேற்க உள்ளேன்’’ என்று கூறினார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் மற்றும் சூர்யா உடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியுள்ளார். மாடல் அழகியான அக்ஷரா ரெட்டி சமீபத்தில் விஜய் டிவி நடத்திய ‘வில்லா டூ வில்லேஜ்’ என்னும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்