ஆப்நகரம்

Bigil: வீரத்தை தொடர்ந்து கத்தி ரீமேக்கை கையிலெடுத்த அக்ஷய் குமார்!

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் “பிகில்”படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது கத்தி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

Samayam Tamil 31 Jul 2019, 7:39 am
விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த திரைப்படம்“கத்தி” விவசாயிகளின் பிரச்சனையை வலுவாக சொன்ன படம். விவசாய நிலங்களுக்காகMNC கம்பெணிகளை எதிர்த்து போராடும் ஒருவனைப்பற்றிய கதைதான் கத்தி. கத்தி படம் வெளிவந்த போது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு மாஸ் ஹீரோ படமாகஇல்லாமல் விவசாயிகளின் வலிகளை பிரச்சனைகளை அழுந்தச் சொன்ன படமாக இருந்தது. பல்வேறு நேர்மறை விவாதங்களை இப்படம் துவக்கி வைத்தது. அதே நேரம் மக்களாலும் கொண்டாடப்பட்டது.
Samayam Tamil Untitled


Also Read: Bindu Madhavi: அமலா போல் ஆடையின்றி நடிப்பேன்...பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் அசத்தல் பேட்டி!!

கத்தி படத்தின் வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதுவரை விஜய் நிறைய ரீமேக் படங்கள் செய்து வந்தார். ஆனால் கத்தி படத்திற்கு பிறகு அவரது படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட ஆரம்பித்தன. கத்தி தெலுங்கில் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்யப்பட்டு பம்பர் ஹிட்டானது. இந்தியில் அக்சய் குமார் நடிக்க இப்படம் ரீமேக் செய்யப்பட இருந்தது. ஆனால் மிஷன் மங்கள் எனும் ஏவுகணை பற்றிய படம் காரணமாக இப்படம் தள்ளி வைக்கப்பட்டது.

Also Read: பல ஆண்டுகள் ரகசியத்தை உடைத்த மொட்டை ராஜேந்திரன்!!

தற்போது மீண்டும் இப்படம் துவங்க உள்ளது. மிஷன் மங்கள் படத்தின் இயக்குநர் ஜகன் சக்தியே இப்படத்தையும் இயக்க உள்ளார். அக்சய் குமார் நடிப்பில் இப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விஜய் படம் ஒன்று இந்தியில் ரீமேக்காவதில் விஜய் ரசிகர்கள் குஷியாகி கொண்டாடி வருகிறார்கள்.

Also Read: நீங்க இதை செய்தால், நாடே உங்கள கையெடுத்து கும்பிடும்: அஜித், விஜய் ரசிகர்களுக்கு கஸ்தூரி அறிவுரை!

அடுத்த செய்தி

டிரெண்டிங்