ஆப்நகரம்

இயக்குநர் ஷங்கர் ஒரு விஞ்ஞானி : அக்ஷய் குமார்

நடிகர் அக்ஷய் குமார் இயக்குநர் ஷங்கரை ஒரு விஞ்ஞானி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

TOI Contributor 17 Jul 2016, 1:00 pm
நடிகர் அக்ஷய் குமார் இயக்குநர் ஷங்கரை ஒரு விஞ்ஞானி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil akshay kumar praising director shankar
இயக்குநர் ஷங்கர் ஒரு விஞ்ஞானி : அக்ஷய் குமார்


எந்திரனின் இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து இயக்குநர் ஷங்கர் 2.0 எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். கபாலி படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓய்விற்காக ரஜினி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் தற்போது அவர் அல்லாத பகுதிகளை ஷங்கர் எடுத்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் பற்றி அக்ஷய் குமார் பேசிய போது, அவர் ஒரு விஞ்ஞானிக்கு ஒப்பானவர் என்று கூறியுள்ளார். அவரின் பணிகள் வியப்பை ஏற்படுத்துவதாகவும், 2.0 திரைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்துவிடுவார்கள் என்று கூறினார். சில தொழில்நுட்பங்கள் ஆசியாவிலேயே இதுவரை உபயோகிக்கவில்லை, இந்த திரைப்படத்தில் உபயோகித்து இருப்பதாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். ரஜினி காந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்