ஆப்நகரம்

விமான நிலையத்தில் ராஜமௌலியிடம் வாய்ப்பு கேட்டு கதாநாயகியான நடிகை

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Samayam Tamil 24 Apr 2019, 8:27 pm
இயக்குநர் ராஜமௌலியை விமான நிலையத்தில் சந்தித்து அவரிடம் வாய்ப்பு கேட்டதாகவும், அதனுடைய பலன் தற்போது நிறைவேறியுள்ளது என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ள செய்தி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்டு ராஜமௌலி படத்தில் கதாநாயகியான நடிகை
விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்டு ராஜமௌலி படத்தில் கதாநாயகியான நடிகை


ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது. சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த, இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகளவில் பல நாடுகளில் வரவேற்பை பெற்றது.

இதன் காரணமாக இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராஜமௌலியின் தற்போது 'ஆர் ஆர் ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

ஆலியா பட்


இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகுபலி படத்தை பார்த்த பிறகு ராஜமமௌலியின் படத்தில் நடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஒருமுறை அவரை விமானநிலையத்தில் சந்தித்த போது, உங்கள் படத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று நானாகவே சென்று கெஞ்சினேன். அதனால் அவர் அளித்த வாய்ப்பு தான் ஆர் ஆர் ஆர் படம். எனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜமௌலிக்கு நன்றி' என்றார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விடுதலைப் போராட்ட வீரர்களான அல்லூரி சித்தராம ராஜு மற்றும் கோமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகி வருகிறது. முன்னதாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்கிற பிரிட்டன் நடிகை அப்படத்திலிருந்து சமீபத்தில் விலகினார். தற்போது அவர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்