ஆப்நகரம்

படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது காயமடைந்த பிரபல நடிகை!

படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது பிரபல நடிகை யாபட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Mar 2018, 5:56 pm
படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது பிரபல நடிகை யாபட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது காயமடைந்த நடிகை
படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது காயமடைந்த நடிகை


நடிகை ஆல்யாபட் தற்போது ‘பிரமாஸ்திரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அயன்முகர்ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆல்யாபட்டுடன், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், திவ்யனேடு சர்மா, சந்தா பாண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆலியாபட் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டை கலைஞர்களுடன் மோதினார் ஆலியா. பாதுகாப்பிற்காக ஆலியாபட் ரோப் கட்டியிருந்தார். என்றாலும் சண்டைபோடும்போது ஆலியாபட் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிக்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்