ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் சேர்ந்து நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பிரபாஸுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்று தகவல் வெளியானது. படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது மட்டும் அல்லாமல் ப்ரொஃபஷனலாகவும் நடக்கவில்லை பூஜா என்று பிரபாஸ் கோபப்பட்டாராம். இதையடுத்து பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் பேசிக் கொள்வதில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறது. ராதே ஷ்யாம் படத்தை தயாரித்திருக்கும் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது,
பிரபாஸுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையே பிரச்சனை என்பதில் உண்மை இல்லை. அவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் அதிக மரியாதை வைத்திருக்கிறார்கள்.
பூஜா எப்பொழுதுமே சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார். சொல்லப் போனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் எளிது. யாரோ ஒருவருடைய கற்பனை தான் இந்த வதந்திகள் எல்லாம். ஹீரோ, ஹீரோயின் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் விளக்கம் அளித்திருக்கிறது. ராதே ஷ்யாம் படத்தை தயாரித்திருக்கும் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது,
பூஜா எப்பொழுதுமே சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார். சொல்லப் போனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் எளிது. யாரோ ஒருவருடைய கற்பனை தான் இந்த வதந்திகள் எல்லாம். ஹீரோ, ஹீரோயின் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.