ஆப்நகரம்

Bigil Collection: உலகம் முழுவதும் தியேட்டர் வாசலிலே காத்திருந்த ரசிகர்கள் - இதோ வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக காத்திருந்துள்ளனர்.

Samayam Tamil 25 Oct 2019, 8:06 am
அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்க, 2 தினங்களுக்கு முன்னதாகவே இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Bigil Football


Bigil Twitter Review: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சிறப்பு காட்சி!

இன்று உலகம் முழுவதும் வெளியான பிகில் படத்திற்காக கோடான கோடி ரசிகர்கள் இரவு முழுவதும் திரையரங்குகளுக்கு முன்பாக நின்று கொண்டு விஜய்யின் வெறித்தனம் பாடலை பாடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறப்பு காட்சி இல்லாததால், கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

சரி, தமிழகத்தில்தான் இப்படி என்றால், வெளிநாடுகளில், அதுக்கும் மேலாக இருக்கிறது. இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டிகட்டுகளில் நின்று கொண்டு பிகில் படத்தின் பாடலை பாடி மகிழ்ந்துள்ளனர்.

பிகிலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

இப்படத்தில் அதிகளவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக ராயப்பன் இருக்கிறது. இது தவிர, மைக்கேல் மற்றும் பிகில் ஆகிய கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே சொல்லலாம். முன்னதாக இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், இன்று திரையரங்குகளில் வெற்றி கொடி நாட்டியுள்ளது. எமோஷன்ஸ், சென்டிமெண்ட், சாங்ஸ், ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவற்றி விஜய் தெறிக்கவிட்டுள்ளார்.

கேபி செல்வா மற்றும் அம்ஜத் மீரான் ஆகியோர் இப்படம் தங்களுடைய கதை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், அம்ஜத் தொடர்ந்த வழக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பிகில் படத்திற்கு தடை கோரியதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளதால், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















அடுத்த செய்தி

டிரெண்டிங்