ஆப்நகரம்

"தவறாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்"- அல்லு அர்ஜூன் உறுதி..!

மொழி எனக்கு சரளமாக பேச வராவிட்டாலும்,நான் தமிழில் தான் பேசுவேன் என தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

TNN 22 Sep 2016, 2:14 pm
மொழி எனக்கு சரளமாக பேச வராவிட்டாலும்,நான் தமிழில் தான் பேசுவேன் என தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil allu arjun wants to act in direct tamil film
"தவறாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்"- அல்லு அர்ஜூன் உறுதி..!


லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படபூஜை விழாவில் பேசிய அல்லு அர்ஜூன் ,தனது பேச்சு முழுவதையும் தமிழிலேயே பேசினார்.”நான் 20 ஆண்டுகளாக சென்னையில் தான் வளர்ந்தேன்.எனக்கு சொந்த ஊர் என்றால் அது சென்னைதான்.நான் பேசும் தமிழில் சில தவறுகள் இருக்கலாம்.ஆனால் தப்பாக பேசினாலும் இன்று என்னுடைய முழு பேச்சையும் தமிழில்தான் பேச வேண்டும் என உறுதியாக இருந்தேன்.

என்னுடைய படங்கள் மற்ற மாநிலங்களில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் தமிழில் மட்டும் வெளியிடவில்லை.ஏனென்றால் தமிழ் நாட்டில் வளர்ந்த எனக்கு தமிழில் நேரடியாக படம் நடிக்க வேண்டும் என ஆசை.அந்த ஆசை பல நாட்களுக்கு பிறகு இப்போது நனவாகியுள்ளது.”என அல்லு அர்ஜூன் பேசினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்