ஆப்நகரம்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நடிகரிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்ட பெண் இயக்குனர்!

பெண் இயக்குனரான வின்டா, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் அலோக் நாத்திடம் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 3:22 pm
தற்போது இந்தியா முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சை பாலியல் குற்றச்சாட்டுகள் தான். சினிமாவை சேர்ந்த நடிகைகள் தான் தற்போது இந்த மீடூவில் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகிறார்கள். இதில் சில பிரபலங்களும் சிக்கினர்.
Samayam Tamil vinta-nanda


இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பெண் இயக்குனரும் எழுத்தாளருமான விண்டா நந்தா பிரபல நடிகர் அலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காராம் செய்ததாக புகார் அளித்திருந்தார்.

அவர் சமூகவலைதள பக்கத்தில் நண்பர்கள் கூட்டதுடன் பார்ட்டி முடித்துவிட்டு மது போதையில் சாலையில் சென்ற போது வீட்டில் இறக்கி விடுகிறேன் என கூறி காரில் அழைத்து சென்று என் வீட்டிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த நாள் மதியம் கண் முழித்து பார்த்த போது தான் எனக்கு இது தெரியவந்தது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அலோக், வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் ஆலோக் நாத் தன்னிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மேலும் ரூ.1 கோடி இழப்பீடும் கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்