ஆப்நகரம்

நடனம் என்றாலே எனக்கு நடுக்கம்தான் வருகிறது; சிவகார்த்திகேயன்!

நடனம் என்றாலே என் கால் கை எல்லாம் நடுக்கம் ஏற்படுகிறது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

TNN 1 May 2016, 7:25 pm
நடனம் என்றாலே என் கால் கை எல்லாம் நடுக்கம் ஏற்படுகிறது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Samayam Tamil always feel shivering while somebody asked to dance
நடனம் என்றாலே எனக்கு நடுக்கம்தான் வருகிறது; சிவகார்த்திகேயன்!


‘ரஜினி முருகன்’ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 11வது படம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

படங்களில் நடனம் ஆடிய அனுபவம் பற்றி சிவகார்த்திகேயன் நம்மிடம் கூறுகையில், ‘‘‘சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நடனம் ஆடவேண்டும் என்றாலே உடனே நடுங்கி விடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை.

பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும். மிகவும் சிரமப்பட்டுதான் ஆடுவேன். இந்த அளவுக்கு வேலை வாங்குவார். என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்த நடனங்கள் ‘மான் கராத்தே’, ‘ரஜினி முருகன்’ படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்