ஆப்நகரம்

சசிகணேசனும், அவர் மனைவியும் போனில் அசிங்கமாக திட்டினார்கள்: அமலாபால்!

இயக்குனர் சுசிகணேசனும், அவர் மனைவி மஞ்சரியும் சேர்ந்து கொண்டு என்னை போனில் அசிங்க அசிங்கமாக திட்டினார்கள் என்று நடிகை அமலாபால் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 4:58 pm
மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சுசிகணேன் ‘விரும்புகிறேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து ‘5 ஸ்டார்’, ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுத்தாளர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார். அவருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil amala


மேலும் சுசி கணேசன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலா பால் கூறினார். நடிகை அமலா பால், லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டு சுசி கணேசன் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார். லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்று சுசி கணேசன் கூறி வந்த நிலையில் முன்னணி நடிகையான அமலா பால் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் அனைவரின் கவனமும் இந்த விவகாரம் பக்கம் திரும்பியுள்ளது.

அமலா பால் இது பற்றி கூறுகையில், “இயக்குனர் சுசி கணேசன் மற்றும் அவரின் மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். போனில் சுசிகணேசன் என்னை திட்டத் துவங்கினார். அவரின் மனைவியோ அதைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து என்னை பற்றி அசிங்க அசிங்கமாக திட்டினார்கள்” என அமலா பால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்