ஆப்நகரம்

கதை கேட்கும் முன் கோடி சம்பளம் பேசும் நடிகையை கண்டு இயக்குனர்கள் ஓட்டம்!

கதை கேட்கும் முன்பு நடிகை தன் சம்பளத்தை கோடியில் சொல்வதால், கதையை சொல்லாமலேயே இயக்குனர்கள் பலர் ஓட்டம் பிடிக்கின்றனர்.

Samayam Tamil 17 Apr 2018, 4:43 pm
கதை கேட்கும் முன்பு நடிகை தன் சம்பளத்தை கோடியில் சொல்வதால், கதையை சொல்லாமலேயே இயக்குனர்கள் பலர் ஓட்டம் பிடிக்கின்றனர்.
Samayam Tamil amalapaul


நடிகை அமலா பாலுக்கு தற்போது தமிழிலும், மலையாளத்திலும் கைவசம் எந்தப் படமும் இல்லை. இவர் திருமணத்துக்கு முன்பு பிஸியான நடிகையாக இருந்து வந்தார். பின்னர் கணவரை விவாகரத்து செய்த பின்பும் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இதற்கு காரணம், அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு இயக்குனர்கள் கதை சொல்லாமலேயே ஓடி விடுகின்றனர்.

தன்னிடம் கதை சொல்ல வரும் போது அவர்களிடம் தனக்கு கோடியில் சம்பளம் வேண்டும் என்று கறாராக கூறிவிடுகிறாராம். இதனால், ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் பயப்படுகிறார்களாம். தற்போது இவருக்கு மார்க்கெட் இல்லை என்ற விஷயம், அவரைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்து என்ன பயன் என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்