ஆப்நகரம்

காக்கியில் மிரட்ட வரும் நடிகை அமலாபால்!

‘தலைவா’ படத்தை அடுத்து நடிகை அமலாபால், ‘காடாவர்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Samayam Tamil 26 Feb 2019, 4:56 pm
‘ராட்சசன்’ படத்தை அடுத்து நடிகை அமலாபால், ‘காடாவர்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ராட்சசன்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
Samayam Tamil amala-paul


அதையடுத்து நடிகை அமலாபால் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ உட்பட ஒரு சில மலையாள படங்கள் உள்ளவைகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அனூப் பானிகர் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஒப்பந்தமாகியள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘காடாவர்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் க்ரைம் மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகை அமலா பால், பத்ரா என்ற பெயரில் மிரட்டல் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறாராம். இந்தப் படத்தை ஏ.ஜே.பிலிம்ஸ் மற்றும் வைட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படபிடிப்பு மார்ச் 25 முதல் துவங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்