ஆப்நகரம்

ஆடை இந்தி ரீமேக்: இந்த முன்னணி பாலிவுட் ஹீரோயின் ஒப்பந்தம்?

அமலா பால் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஷ்ரத்தா கபூர் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 8:47 am
நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் ஒரு இடத்தில சிக்கிக்கொள்வது போன்ற கதையில் நடித்து இருந்த படம் ஆடை. இந்த படம் கடந்த வருடம் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வந்தது. அதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ரோலில் மிகவும் தைரியமாக அமலா பால் நடித்து இருப்பதற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
Samayam Tamil Aadai


இந்நிலையில் ஆடை படத்தினை பாலிவுட்டில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. அமலா பால் மிகவும் போல்டாக நடித்து இருந்த இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அவருடன் நடந்து வருகிறது என்றும், இன்னும் ஒரு மாதத்தில் ஆடை இந்தி ரீமேக் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழில் ஆடை படத்தினை இயக்கிய ரத்னகுமார் தான் பாலிவுட்டிலும் அதனை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் அருண் பாண்டியன் ஆடை படத்தின் ரீமேக் உரிமையை மும்பையில் உள்ள ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் தான் தற்போது ஷ்ரத்தா கபூரை அணுகி இருக்கிறார்கள். அவரும் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என்றும், ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.

சென்ற வருடமே ஆடை படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகும் என கூறப்பட்டது. அதில் கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்று கூட தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என தயாரிப்பாளர் அருண் பாண்டியன் விளக்கம் அளித்து இருந்தார். மேலும் ஒரு முன்னணி நட்சத்திரம் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் அது யார் என்பதை அப்போது அவர்கூறவில்லை.

இந்நிலையில் தான் ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஷ்ரத்தா கபூர் ஏற்கனவே பிரபாஸின் சாஹா படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னகுமார் இயக்கி இருந்த ஆடை படத்தில் அமலா பாலுடன், விவேக் பிரசன்னா, தொகுப்பாளர் ரம்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக பெரிய அளவில் இந்த பட பாராட்டப்பட்டது ஆனால் வசூல் ரீதியில் ஆடை படம் பெரிதாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கும் நிலையில் அதில் இயக்குனர் ரத்தினகுமார் கதை எழுதுவதில் தன்னுடைய பங்கை கொடுத்து இருக்கிறார். அவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்காமல் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். மாஸ்டர் படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்