ஆப்நகரம்

ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்து வளரும் ஆண்மகனிடம் பாலியல் குற்றங்கள் இருக்காது: பிரபல நடிகையின் கருத்து!

ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்து வளரும் ஆண்மகனிடம் எப்போதுமே பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இருக்காது என்று பிரபல நடிகை ஆம்பர் ரோஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Apr 2018, 5:37 pm
ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்து வளரும் ஆண்மகனிடம் எப்போதுமே பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இருக்காது என்று பிரபல நடிகை ஆம்பர் ரோஸ் கூறியுள்ளார்.
Samayam Tamil amber-rose


ஆம்பர் ரோஸ் என்பவர் ஹாலிவுட்டில் பிரபல நடிகையாகவும், மாடல் அழகியுமாக இருந்து வருகிறார். இவர் கணவரை விட்டு பிரிந்து தனது 5 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆம்பர் ரோஸ், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், ‘‘தனது 5 வயது மகன் முன், தான் எப்போதும் நிர்வாணமாகத்தான் காட்சியளிப்பேன். தனது மகனுக்கு பெண்ணுறுப்பு உள்பட பெண்களின் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும். அவன் இந்த வயதிலேயே பெண்கள் குறித்து அவன் முழுமையாக தெரிந்து கொண்டால் பின்னாளில் அவன் பெண்ணியவாதியாக வளர்வான். ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தாலும் ஆண்மகன் சாதாரணமாக இருக்க வேண்டும். அப்படி வளர்க்கப்பட்டால் இந்த உலகில் பாலியல் குற்றங்களே இருக்காது என்றும், என் மகன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காகத்தான் அவன் முன் நிர்வாணமாக தோன்றுகிறேன்’’ என்று ஆம்பர் பேட்டியில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்