ஆப்நகரம்

ரூ.2.5 கோடி ஏமாற்றி ஏப்பம் விட்ட அமீஷா படேல்!

‘புதிய கீதை’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை அமீஷா படேல், சினிமா பைனான்சருக்கு தரவேண்டிய ரூ. 2.5 கோடி தராமல் ஏமாற்றியுள்ளார்.

Samayam Tamil 30 Mar 2019, 4:29 pm
தமிழ் சினிமாவில் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் விஜயக்கு ஜோடியாக அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை அமீஷா படேல். இதையடுத்து அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவர் பண மோசடியில் மாட்டியுள்ளார்.

நடிகை அமீஷா படேல், குணால் ரூமர் என்பவருடன் இணைந்து ‘தேசி மேஜிக்’ என்ற படத்தை தயாரித்தார். அதற்காக பைனான்சியர் அஜய் குமார் சிங் என்பவரிடம் இருந்து ரூ. 2.5 கோடி ருபாய் கடனாக பெற்றுள்ளார் நடிகை அமீஷா படேல். படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அந்த பணத்தை இன்னும் திருப்பி கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமீஷா படேல், பைனான்சியருக்கு கொடுத்த ரூ. 3 கோடிக்கான செக் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளது. இதுபற்றி பைனான்சியர் கேட்டதற்கு அமீஷா படேல் தரப்பு மிரட்டியுள்ளது. இதனால் தற்போது சினிமா பைனான்சியர் அஜய்குமார் சிங், நடிகை அமீஷா படேல் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்