ஆப்நகரம்

கல்லீரல் பிரச்சனை: மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Oct 2019, 10:13 am
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், கடந்த 1982-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டதால், புதிய ரத்தம் ஏற்றப்பட்டது.
Samayam Tamil 71135996


அப்போது அந்த ரத்தத்தில் ஹெப்பாடிட்டீஸ் பி வைரஸ் இருந்துள்ளது. அதன் விளைவாக நாளடைவில் அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. அன்றில் இருந்து கல்லீரல் பிரச்சினையால் அபிதாப் பச்சன் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் அமிதாப் பச்சன் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

தீபாவளிக்கு நேருக்கு நேராக மோதி கொள்ளும் பிகில் Vs கைதி! குழப்பத்தில் ரசிகர்கள்...

இந்த நிலையில் அமிதாப் பச்சனுக்கு கடந்த 15 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மும்பையில் உள்ள நானாவதிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பேய் மாமா: வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு!

மேலும் அமிதாப் பச்சன் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அமிதாப் பச்சன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்