ஆப்நகரம்

Amitabh Bachchan Look: 50 வருட வாழ்க்கையில் முதன் முதலாக தமிழில் அறிமுகமான உயர்ந்த மனிதன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 50 வருட சினிமா வாழ்க்கையில், முதன் முதலாக உயர்ந்த மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2019, 3:41 pm
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 50 வருட சினிமா வாழ்க்கையில், முதன் முதலாக உயர்ந்த மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
Samayam Tamil amitabh


பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன் கடந்த 1969ம் ஆண்டு முதல் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஷாத் ஹிந்துஸ்தானி என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை அவர் நடித்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரது பிங்க் படம் நேரடியாக நேர்கொண்ட பார்வை என்ற தமிழ் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யாவின் கள்வனின் காதலி என்ற படத்தின் இயக்குனர் தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகி வரும் உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தி என்று இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்.ஜே. சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், என் வாழ்க்கையின், சந்தோஷமான தருணம் இது. இதுவரை நான் கண்டிராத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. பாலிவுட்டின் சூப்பர் அமிதாப் பச்சன் அவர்களுக்கும் நன்றி. எனது இந்த மகிழ்ச்சியை நான், ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தமிழ் வாணன் கூறுகையில், எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்றிட முடியும். பாலிவுட் திரையுலகைன் முடிசூடா மன்னன் அமிதாப் பச்சன் உடன் பணியாற்றியது மிகப்பெரிய பாக்கியம். எனது இயக்கத்தில் தான் இவரது முதல் படம் என்பது பெரிய பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையின் நடந்த விழாவின் போது இப்படத்தின் டைட்டிலை ரஜினிகாந்த் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து சிரஞ்சீவி, ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்