ஆப்நகரம்

கொரோனா குறும்படத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினி: எப்போது வெளியாகும்? முழு விவரம்

ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளனர்.

Samayam Tamil 6 Apr 2020, 3:16 pm
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளை புரட்டி போட்டுள்ளது. உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Rajinikanth and Amitabh Bachchan


இந்தியாவிலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நான்காயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மக்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என்றால் கொரோனா எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கை அமல் படுத்தினாலும் வெளியில் சுற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படம் தயாராகி உள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பிர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பேமிலி என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். நடிகர்களை நேரில் வரவைக்காமல் virtual முறையில் இந்த குறும்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

இன்று இரவு 9 மணிக்கு அந்த வீடியோ வெளியாகவுள்ளது.

ஊரடங்கை கடைபிடிப்பது, சமூக விலகல், வீட்டில் இருந்து பணியாற்றுவது, சுத்தமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த குறும்படம் மூலமாக மக்களுக்கு வலியுறுத்தப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்