ஆப்நகரம்

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணையும் அபிராமி!

கார்த்தியும், ஜோதிகாவும் நடிக்கும் படத்தில் ‘ராட்சசன்’ பட புகழ் நடிகை அபிராமியும் இணைந்து நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 14 May 2019, 6:43 pm
பிரபல மலையாள இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். இவர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்‘ மற்றும் அதே படத்தை தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘பாபநாசம்‘ என்கிற பெயரில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார்.
Samayam Tamil karthi-abi


தற்போது மீண்டும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க விருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை அபிராமி இந்த படத்திலும் நடிக்கவுள்ளார். இதை தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து அபிராமி கூறுகையில், ‘‘சிறப்பான இந்த படத்தல் பங்கு பெறுவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஜோதிகா மற்றும் சத்யராஜூடன் இணைந்து நடிப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். ‘தீரன்’ படத்துக்கு பிறகு கார்த்தியுடன் நடிக்கும் எனது இரண்டாவது படம் இது’’ என்றார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்