ரஜினி நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பில் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகை எமி ஜாக்சன்.
தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானார் எமி. படத்தில் இவர் வெள்ளக்கார பெண்ணாக நடித்தார். இவரது பூர்வீகம் லண்டன். ஒரு படத்தை முடித்து விட்டு நாடு திரும்பலாம் என்றிருந்த அவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்தது. அதில் நடித்தார். அடுத்ததாக ஷங்கர் ‘ஐ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். சென்னை புறநகரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எமி ஜாக்சன் தனது 25வது பிறந்த தினத்தை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். கேக் வெட்டி இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கு ஊட்டி மகிழ்ந்தார். ஷங்கர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார். மேலும் படக்குழுவினர் அனைவரும் எமிக்கு வாழ்த்து கூறினர்.
தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானார் எமி. படத்தில் இவர் வெள்ளக்கார பெண்ணாக நடித்தார். இவரது பூர்வீகம் லண்டன். ஒரு படத்தை முடித்து விட்டு நாடு திரும்பலாம் என்றிருந்த அவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்தது. அதில் நடித்தார். அடுத்ததாக ஷங்கர் ‘ஐ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். சென்னை புறநகரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எமி ஜாக்சன் தனது 25வது பிறந்த தினத்தை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். கேக் வெட்டி இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கு ஊட்டி மகிழ்ந்தார். ஷங்கர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார். மேலும் படக்குழுவினர் அனைவரும் எமிக்கு வாழ்த்து கூறினர்.