ஆப்நகரம்

என் தம்பி தற்கொலைக்கு இதுதான் காரணம்: கடிதத்தில் எழுதியிருந்ததை வெளியிட்ட ஆனந்த்ராஜ்

நடிகர் அனந்தராஜின் சகோதரர் தற்கொலை செய்துகொண்டதற்கு ஏலச்சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் என தகவல் பரவியது. ஆனால் உண்மை காரணாம் என்ன என்பதை நடிகர் தற்போது கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2020, 5:12 pm
வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து தற்போது பல படங்களில் காமெடியன் வேடத்தில் நடித்து வருபவர் ஆனந்த் ராஜ்.
Samayam Tamil Anandraj brother Suicide


அவரது தம்பி கனகசபை புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் அவர். இது பற்றி அறிந்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அவர் ஏலச்சீட்டு நடத்திவந்ததாகவும் அவரிடம் பல முக்கிய பிரபலங்கள் பல கோடி ருபாய் அளவுக்கு சீட்டு கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட நஷ்டம் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தகவல் பரவியது.

ஆனால் நடிகர் ஆனந்த்ராஜ் இதை மறுத்துள்ளார். "என தம்பி நஷ்டத்தினால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் சமீபத்தில் பணம் கொடுத்து ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அது தொடர்பாக சிலர் இவரை மிரட்டி வந்திருக்கிறார்கள். அதனால் தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அவரை எடுத்திருக்கிறார். இந்த விஷயத்தை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்" என ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

அவரை மிரட்டிய நபர்கள் பற்றி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் போலீசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஆனந்த்ராஜின் தம்பியிடம் ஏலச் சீட்டு கட்டி வந்தவர்கள் தற்போது பணத்தை திருப்பி தரும்படி அவரது வீடு முன்பு குவிந்துள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்