ஆப்நகரம்

அந்த காட்சியில் நடித்தது தவறு என்பது இப்போது புரிகிறது - ஆண்ட்ரியா

வடசென்னை படத்தில் குறிப்பிட்ட காட்சியில் நடித்தது தவறு என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Feb 2020, 3:26 pm
வடசென்னை படத்தில் தான் நெருக்கமான காட்சியில் நடித்தது தவறு என்பது எனக்கு இப்போது புரிகிறது என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
Samayam Tamil andrea


பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது கெரியரில் முக்கியமான படம் என்றால் அது வடசென்னை என்று கூட சொல்லலாம். அவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் அந்த படத்தில்.

இந்நிலையில், சமீபத்தில் ஆண்ட்ரியா அளித்த ஒரு பேட்டியில் வட சென்னை படத்தில் குறிப்பிட்ட காட்சியில் நடித்தது தவறு என தற்போது புரிகிறது என கூறியுள்ளார். அந்த படத்துக்குப் பிறகு அதுமாதிரியான காட்சிகள் இருக்கும் படங்களே திரும்ப திரும்ப வருகின்றன என குறிப்பிட்டுள்ளார் ஆண்ட்ரியா. நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால், தனது சம்பளத்தைக் குறைத்து கொள்ளக் கூட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது , ஆண்ட்ரியா விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் கா, வட்டம், மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்