ஆப்நகரம்

Maaligai Movie: நயன்தாரா வரிசையில் ஆண்ட்ரியா: மாளிகை படத்தில் போலீஸ், ராணி என்று 2 வேடம்!

முதன் முறையாக நடிகை ஆண்ட்ரியா மாளிகை என்ற வரலாற்று படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Samayam Tamil 10 Apr 2019, 4:20 pm
முதன் முறையாக நடிகை ஆண்ட்ரியா மாளிகை என்ற வரலாற்று படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil rea



தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அதில், முதலில் இருப்பது நயன்தாரா. இவரைப் போன்று மற்ற நடிகைகள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றனர். நயன்தாரா, த்ரிஷா, ஜோதிகா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியாவும் அவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.

இயக்குனர் தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் படம் மாளிகை. முதன் முறையாக ஆண்ட்ரியா இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று போலீஸ் அதிகாரியாகவும், மற்றொன்று ராணி போன்ற ஒரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து தில் சத்யா கூறுகையில், ஆக்‌ஷன், கற்பனை மற்றும் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, வரலாற்று படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ராணி கதாபாத்திரம் படத்தில் கற்பனை பகுதியாக இருக்கும். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த கதாபாத்திரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும், 400 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பதை காட்டும் வகையில், இந்த காட்சி இருக்கும்,

மேலும், விசாரணைக்காக அரண்மனைக்கு வரும் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா, அங்கு, தனது கடந்தகால வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளும் வகையில், காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அவரது கடந்தகால வாழ்க்கை எப்படியிருந்தது, என்ன நடந்தது, என்பதையெல்லாம், ஆண்ட்ரியாவுக்கு ஞாபகப்படுத்தும் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம் இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், ஆண்ட்ரியாவின் பார்ட்னராக நடித்துள்ளார். அசுடோ ராணா, கேஎஸ் ரவிக்குமார், மனோ பாலா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் தெலுங்கு காமெடி நடிகர்கள் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்