ஆப்நகரம்

தத்தெடுத்த குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் ஏஞ்சலினா..!

தத்தெடுத்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர்கள் அந்த குழந்தைகளை கேட்பதால் சிக்கலில் மாட்டித்தவிக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலி .

TNN 7 Dec 2016, 8:57 pm
தத்தெடுத்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர்கள் அந்த குழந்தைகளை கேட்பதால் சிக்கலில் மாட்டித்தவிக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலி .
Samayam Tamil angelina jolie brad pitt may lose custody of adopted children
தத்தெடுத்த குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் ஏஞ்சலினா..!


பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி,பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.இவர்களில் கம்போடிய நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்த மட்டோக்ஸ் மற்றும் பாக்ஸ் ஆகிய இரண்டு குழந்தைகளும் அடக்கம்.

இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் வியட்நாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால்,குழந்தைகள் காப்பகத்தில் இருந்த அந்த குழந்தைகளை ஏஞ்சலினா ஜூலி கடந்த 2007-ஆம் ஆண்டு தத்தெடுத்தார்.இந்நிலையில் வியட்நாம் சிறையிலிருந்து குழந்தைகளின் பெற்றோர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும்,தங்கள் குழந்தைகளுடன் இணைந்து வாழ அவர்கள் விரும்பவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் மேட்டோக்ஸின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாகவும்,அதனை மறைத்து கலிண்டோ என்ற புரோக்கர் ஏஞ்சலினாவிடம் இந்த குழந்தையை தத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதுபோல சட்டவிரோதமாக 800-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்துக் கொடுத்ததற்காக கலிண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் பாக்சின் தாய் குடும்ப வறுமை காரணமாக,100 டாலர்களுக்கு தனது குழந்தையை கலிண்டோவுக்கு விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து குழந்தைகள் உரிமை அமைப்புகள் கலிண்டோவிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

இதனால் தங்களுடைய இரண்டு தத்துக் குழந்தைகளும் தங்களிடம் இருந்து பிரிந்து சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏஞ்சலினா ஜூலி உள்ளாராம்.

Angelina Jolie, Brad Pitt may lose custody of adopted children

அடுத்த செய்தி

டிரெண்டிங்