ஆப்நகரம்

Varisu, vijay: பூதாகரமான யானை பிரச்சனை: வாரிசு தயாரிப்பாளருக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ்

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்குமாறு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 24 Nov 2022, 2:10 pm
உரிய அனுமதியின்றி யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியது குறித்து விளக்கம் கேட்டு விஜய்யின் வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது.
Samayam Tamil animal welfare board issues notice to vijay starrer varisu movie team
Varisu, vijay: பூதாகரமான யானை பிரச்சனை: வாரிசு தயாரிப்பாளருக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ்



வாரிசு

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வரும் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக செட் போட்டு காட்சிகளை ஷூட் செய்து வருகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான மாடுகள், 5 யானைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். உரிய அனுமதி பெறாமல் விலங்குகளை வைத்து ஷூட்டிங் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விலங்குகள் நலவாரியத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்று பிரச்சனை பெரிதாகிவிட்டது.

நோட்டீஸ்

உரிய அனுமதியின்றி யானைகளை வைத்து எப்படி படம் எடுத்தீர்கள்?. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது. படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு அனுமதி வாங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக அனுமதியின்றி வாரிசு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் யானைகள் பயன்படுத்தப்படுவதாக செய்தி கசிதந்ததுமே செய்தியாளர்கள் அங்கு சென்றார்கள்.

Twitter-Karthik Ravivarma

அடிதடி

வாரிசு படப்பிடிப்பு நடந்து வரும் இடத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. இதையடுத்து தனியார் டிவி சேனல் ஒன்று டிரோனை பறக்கவிட்டதாக கூறப்பட்டது. இதை பார்த்த படக்குழு அவர்களை கண்டித்திருக்கிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை தாக்கியிருக்கிறார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள் செய்தியாளர்கள். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

டிரோன்

டிரோன் பறக்கவிட்டதை பார்த்த பிறகே செய்தியாளர்களை கண்டித்தோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். டிரோன் எல்லாம் பறக்கவிடவில்லை. அங்கு நடந்த எதையும் வீடியோவாக எடுக்கவில்லை. அனுமதியின்றி யானைகளை பயன்படுத்துவதை பார்க்கத் தான் வந்தோம் என தனியார் டிவி சேனல் தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் தாக்கப்பட்டு காவல் நிலையம் வரை சென்ற நிலையில் தற்போது விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் பிரச்சனை பெரிதாகியிருக்கிறது.

கோவில்

கோவில் விழாவுக்கு என்று கூறி யானைகளை வாடகைக்கு எடுத்து நேராக ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு கொண்டு சென்று ஷூட் செய்திருக்கிறார்கள். முன் அனுமதி இல்லாமல் இப்படி யானைகளை பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என்று படக்குழுவுக்கு தெரியாதா என கேள்வி எழுந்துள்ளது. யானைகளை வைத்து படப்பிடிப்பை முடித்துவிட்ட பிறகு அவசரமாக வாங்கிய அனுமதி கடிதத்தால் பிரச்சனை மேலும் பெரிதாகும் என்று கூறப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்