ஆப்நகரம்

இனிமே இண்டர்நேஷனல் லெவல் தான் - அனிரூத்!

இளம இசையமைப்பாளர் அனிருத், முதன் முறையாக லண்டன் மற்றும் பாரீஸில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 5 Apr 2018, 5:56 pm
இளம இசையமைப்பாளர் அனிருத், முதன் முறையாக லண்டன் மற்றும் பாரீஸில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
Samayam Tamil anirudh


இசையமைப்பாளர் அனிருத், ஜூன் மாதம் 16 மற்றும் 17ஆம் தேதிகளில், லண்டனில் தனது இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெம்ப்ளி அரேனா என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

ஜூன் 17ஆம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் அனிருத். இதுவரை இந்த இடத்தில் எந்தவொரு தமிழ் இசையமைப்பாளரும் இசை நிகழ்ச்சி நடத்தியது கிடையாது. அனிருத் தான் முதன்முதலாக இங்கு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து கவனித்து கொள்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்